தர்மபுரி, செப்.4: பாப்பாரப்பட்டி பிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் துரைமுருகன்(18), தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கொல்லப்பட்டி-பிக்கிலி சாலையில் ஜோலப்பாறை என்ற இடத்தில் வந்த போது, அவ்வழியாக வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த துரைமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.