டிராக்டர் மோதி இளம்பெண் பலி

 

திருப்பூர், ஆக.27: திருப்பூர் மணியகாரம்பாளையம் ரோடு, வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் சரண்யா தேவி (31). பனியன் தொழிலாளி. திருக்குமரன் நகரில் மகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மகளை பள்ளியில் விட்டு விட்டு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் சரண்யா தேவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்