டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (35). கூலி தொழிலாளி. ேநற்று புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது அந்த டிராக்டரின் முன்பக்க சக்கரம் எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதை தொடர்ந்து டிராக்டரை இயக்க முயற்சி செய்தபோது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து ஜெகதீசன் அடியில் சிக்கி கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். …

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு