டிராக்டரில் பேட்டரி திருட்டு

நெல்லை, டிச.31: நெல்லை அருகே கங்கைகொண்டான் அடுத்துள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பா(55). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 29ம் தேதி இரவு கங்கைகொண்டான் பகுதியில் டிராக்டரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்