டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முழு மாதிரி தேர்வு

சேலம், ஜூலை3: சேலம் கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இங்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள், பெண்கள் என 55 பேர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள் திருத்தி உடனடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநில அளவிலான மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த முழு மாதிரி தேர்வானது வரும் 5ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் துணை இயக்குனர் மணி, வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன், உஷா, கார்த்திகா உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை