டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிய கொள்ளையர்கள் கைது

 

புழல்: அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மாலை, மது அருந்திய 2 வாலிபர்கள், போதை தலைக்கேறியதும் டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அவரை மிரட்டியுள்ளனர். பின்னர், இதனை தட்டிக்கேட்ட இருவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்த அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாக்கத்தை சேர்ந்த கருப்பு அப்பு (எ) டேனியல் (21), நீலாங்கரையை சேர்ந்த கலிங்கராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’