டவுனில் மொபட் மீது கார் மோதி நகை பட்டறை தொழிலாளி சாவு

நெல்லை, அக்.18: நெல்லை டவுன் மாதா கோயில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (63). இவர் டவுனிலுள்ள ஒரு தங்க நகை பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பாளையங்ேகாட்டையிலுள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். டவுன் நயினார்குளம் சாலையில் அவர் சென்ற போது, பாளையை நோக்கி சென்று கொண்டிருந்த கார், மொபட்டின் பக்கவாட்டில் மோதியது. இதில் மொபட்டிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த அருணாசலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அருணாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகரை சேர்ந்த வேலனை (60) கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை