ஜெர்மனி பெண் பரபரப்பு புகார்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்யா ஆஜர்

சென்னை: ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஆர்யா. பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து அமேசான் ஓ.டி.டி.யில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண், ‘நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் நெருங்கி பழகியதாகவும் அவ்வப்போது ஆன்லைன் மூலம் தன்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்தார்’என சிபிசிஐடி போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆர்யாவின் மீதான புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி ஆர்யாவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி ஆர்யா நேற்றுமுன்தினம் ஆஜரானார். அவரிடம் ஜெர்மனி பெண் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை