‘ஜெய் பீம்’ ராசாக்கண்ணு மனைவிக்கு வீடு: ராகவா லாரன்ஸ் உறுதி

சென்னை: ஜெய் பீம் படத்தின் நிஜ கேரக்டரான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதி அளித்துள்ளார். சூர்யா தயாரித்து நடித்த படம் ஜெய் பீம். த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் பழங்குடியினத்தை சேர்ந்த ராசாக்கண்ணு, பார்வதி ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவானது. தற்போது பார்வதி, வறுமையில் வாடி வருகிறார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த ராகவா லாரன்ஸ், கூறியிருப்பதாவது: செய்யாத குற்றத்துக்காக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை அறிந்தபோது அது என்னை பாதித்தது. பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். 28 வருடங்களுக்கு முன் நடந்த கொடூரமான துயர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசும் பொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கு நன்றி. இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை