Friday, June 28, 2024
Home » ஜெய்ப்பூர் ரயிலில் கொண்டு வந்த 616 சவரன் நகை, 7.84 லட்சம் பறிமுதல் : 2 பேரை கைது செய்து விசாரணை

ஜெய்ப்பூர் ரயிலில் கொண்டு வந்த 616 சவரன் நகை, 7.84 லட்சம் பறிமுதல் : 2 பேரை கைது செய்து விசாரணை

by kannappan

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூர்-கோவை எக்ஸ்பிரசில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 616 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 800 ெராக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஜெய்ப்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 8ல் ஜெய்ப்பூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பி-1 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் இருப்பதை கண்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது, உரிய ஆவணமின்றி ரூ.2 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 781  மதிப்புள்ள 616 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 800 கொண்டு வந்தது தெரியவந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் (48), தேனியை சேர்ந்த ராமநாதன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது….

You may also like

Leave a Comment

nineteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi