சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ தரப்பு மருத்துவர்களிடம் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் விசாரணை நடைபெறகிறது. ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2017ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார். அப்போது, காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து அவரது உடல்நிலை மிக மோசமானது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு சசிகலா, இளவரசி, பன்னீர் செல்வம் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் பன்னீர் செல்வம் எனக்கு எதுவும் தெரியாது, சின்னம்மா மீது எனக்கு எப்போதும் மரியாதை உள்ளது எனக் கூறி பல்டி அடித்தார், ஆறுமுகசாமி ஆணையமும் அனைத்து சாட்சியங்களூம் விசாரித்து முடிக்கப்பட்டது என்று தகவல் அளித்தது. ஆறுமுகசாமி ஆணைய தரப்பை தொடர்ந்து சசிகலா தரப்பும் தன் விசாரணையை நிறைவு செய்ததாக ஆணையத்தில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஆணையத்தில் கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதனையடுத்து இன்று , நாளை மற்றும் மறுநாளில் அப்போலோ மருத்துவர்கள் 9 நபர்கள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். ஏற்கனவே அளித்த சாட்சியத்தினை எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு இந்த 9 மருத்துவர்களும் விளக்குவதற்காக, இவர்கள் விசாரணைக்கு ஆஜராக ஆணையத்திடம் அப்போலோ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று விசாரணை நடைபெறுகிறது….