Sunday, October 6, 2024
Home » ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு

by MuthuKumar

ஜெயங்கொண்டம், ஜூலை 4: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடுகளில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர், திருத்துளார் அருளுடைய நாதர் வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராக முத்தீஸ்வரர், பாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர், ராதாபுரம் வராஹேஸ்வரர் உள்ளிட்ட சிவன்கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர்,தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயிலில் நேற்று பிரகார உலா நடைபெற்றது

You may also like

Leave a Comment

nineteen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi