ஜெயங்கொண்டம் அருகே புகையிலை விற்ற வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்,டிச.22: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் விளாங்குடி கைகாட்டி கடை வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விளாங்குடி கைகாட்டி முட்டுவாஞ்சேரி ரோட்டை சேர்ந்த அசோக்குமார்(40) என்பவர் தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான சுவாகத் போதை பாக்கு 13 பண்டல், ஹான்ஸ் பாக்கெட், கூலிப் 14 பாக்கெட்களும் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் அசோக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்