ஜெயங்கொண்டம்:இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்படி அக்டோபர் 1 ம் தேதி நாடெங்கும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அஞ்சல்துறை திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பாக ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் ஜெயங்கொண்டம் அஞ்சலக ஊழியர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஊழியர்கள் இணைந்து தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். பூங்காவில் இருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த இலைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்தப் பணியில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் உமாபதி , ஜெயங்கொண்டம் துணை அஞ்சலக தலைவர் ரவிச்சந்திரன், துணை அஞ்சலக மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டு தூய்மை இந்தியாவுக்கான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.