ஜூலை 7 முதல் 31 வரை தலைமை தபால் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை

தென்காசி, ஜூலை 3:விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளிலும் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை நடைபெறுகிறது என்று கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 7ம்தேதி முதல் 31.08.2024 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு