ஜூன் 13 முதல் அமலுக்கு வருகிறது வாகன ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் மருத்துவ சான்று

நாகர்கோவில், ஜூன் 11: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 8(3) ன் படி பதிவுப் பெற்ற மருத்துவ அலுவலரிடம் மருத்துவ சான்று பெற வேண்டும். மருத்துவர்கள் தாங்களே இம்மென்பொருளில் உள்ளீடு செய்து விண்ணப்பதாரரின் மருத்துவ சான்றினை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையவழியில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மருத்துவ சான்று மட்டுமே பரிசீலிக்கப்படும் இணையம் அல்லாத வழியில் வழங்கிய மருத்துவச்சான்று ஏற்றுக் கொள்ள மென்பொருளில் வழியில்லை. எனவே மருத்துவ சான்று வழங்கும் மருத்துவர்களுக்கு வரும் ஜூன் 11ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு பயிற்சி வழங்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தகவல் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி முதல் இச்செயல்முறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாகர்கோவிலில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி