ஜீப் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, மே 1: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சாதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (31). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 28ம் தேதி இரவு டூவீலரில் ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் பி.செட்டிப்பள்ளி என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, கெலமங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்