ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள Reasi மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே இந்த செனாப் ரயில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் செனாப் ஆற்றில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. செனாப் பாலம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது. இந்த பாலம் உண்மையிலேயே ஒரு பொறியியல் அதிசயம். ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து 359 மீ உயரத்தில் இந்த பாலம் நிற்கும். ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.