ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கண்டிப்போராவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. …