புதுடெல்லி: ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கண்ணில் புரை ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி கோவிந்த் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. …