ஜனவரி 3 முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைகிளையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளிலிருந்து காணொளி வாயிலாக விசாரித்து வந்தனர். பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் வீட்டிலிருந்தும் நீதிமன்றத்திற்கு வந்தும் வழக்குகளை விசாரித்தனர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கபட்டதோடு காணொளி வாயிலாகவும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைகிளையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்குகள் நேரிடையாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 21 மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் முழுமையாக நேரிடையாக விசாரணை தொடங்கவுள்ளது.      …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை