Friday, June 28, 2024
Home » சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் சத்தாபரணம்

சோழீஸ்வரர் சுவாமி கோயிலில் சத்தாபரணம்

by Karthik Yash

மல்லசமுத்திரம், ஜூன் 25: மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராய பெருமாள் சுவாமி, செல்லாண்டியம்மன் கோயிலில், தேர்த்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனிமூல நட்சத்திர தினமான கடந்த 22ம் தேதி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் நான்கு ரத வீதிகளின் வழியாக வடம்பிடித்து இழுத்து வந்து, கோயிலின் முன் நிலை நிறுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, சத்தாபரண தேர் உற்சவம், சிறப்பு தோரண வாணவேடிக்கை, வசந்த உற்சவம், மஞ்சள் நீராடல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 3 கோயில்களில் தற்காலிக உண்டியல் திறக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டதில் ₹12,117 வசூலாகியிருந்தது.

You may also like

Leave a Comment

twelve + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi