சோழவரம் காவல் நிலையத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

 

புழல், ஜூலை 14: சோழவரம் காவல் நிலையத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்று சோழவரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள கொலை மற்றும் குற்ற வழக்குகளின் முன்னேற்றம், போதை பொருள் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளின் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து உடனுக்குடன் முடித்திட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உடன் இருந்தனர். காவல் ஆணையரின் திடீர் ஆய்வு காரணமாக சோழவரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி