சோழவரம் ஒன்றிய பகுதிகளில் மாதவரம் வி.மூர்த்தி பிரசாரம்

திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி தொகுதி முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்கள், பல்வேறு சமூகநல அமைப்புகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சவர தொழிலாளர், கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சோழவரம் ஒன்றியம் புது மற்றும் பழைய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அமமுக நிர்வாகிகள் கமலக்கண்ணன், கணபதி, முருகன், திவாகர், லட்சுமி ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.அப்போது அவர்கள், தங்களுக்கு வனப்பகுதியில் தார் சாலை அமைத்து தரவேண்டும், விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், அம்மா மினி கிளினிக்கை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கை மனுக்களை அவரிடம் கொடுத்தனர். அதற்கு அவர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்களுடைய கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனவே, இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் நீங்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி என்னை வெற்றி செய்யவேண்டும்,’ என்றார். கண்டிப்பாக நாங்கள் பணியாற்றி உங்களை வெற்றிபெற செய்வோம், என்று கூறி கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…