சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

சோழவந்தான், ஆக. 14: சோழவந்தான் பிரளயநாதர்(சிவன்) கோயிலில், நேற்று நடந்த பிரதோஷ விழாவில் பிரளயநாதர் சுவாமி, பிரளய நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள் ரவி, பரசுராமன் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை தக்கார் இளமதி, எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, தொழிலதிபர் வள்ளிமயில், டாக்டர் மருது பாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், திருவேடகம் ஏடகநாதர் மற்றும் சட்டநாதர் சித்தர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு