சோழவந்தான், சமயநல்லூரில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல்

வாடிப்பட்டி, செப். 15: மதுரை சமயநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமை வகிக்க, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெத்தணசாமி, கிருஷ்ணன், வீரங்கன், ராஜலெட்சுமி, மணிமேகலை, கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசினை கண்டித்து சமயநல்லூர் தபால் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து சமயநல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின் மாலை விடுதலை செய்தனர். சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் காளிதாஸ், ஜோதி ராமலிங்கம், ஜெயக்கொடி உள்ளிட்டோர் அக்ரஹாரம் தெருவில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தார்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி