சோழவந்தான் அருகே போலீசாரை தாக்கிய கும்பலுக்கு வலை

 

சோழவந்தான், செப். 12: சோழவந்தான் அருகே நகரியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமயநல்லூர் அருகே அம்பலத்தாடி கிராமத்தை சேர்ந்த சுமார் 15 இளைஞர்கள் டூவீலர்களில் வந்து கூச்சலிட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர். அவர்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய போலீசார் விதிமீறல்களை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாரின் செல்போன், வாக்கி டாக்கியை தள்ளிவிட்டு உடைத்ததுடன், அவர்களையும் கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் எஸ்எஸ்ஐ பழனிச்சாமி, ஏட்டு சுந்தரபாண்டி, போலீஸ் மனோகரன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்