காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கத்தில் சோழன் கல்வியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இந்திய மொழிகளின் சங்கமம் விழா நேற்று நடந்தது. உதவி பேராசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்போது, தேசியமும் தமிழும் என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் தெ.அன்பு பாரதியும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார். இதைத்தொடர்ந்து பேராசிரியர்கள் தமிழரசி, பாரதிதாசன் கண்ட புதுமைப்பெண் என்ற தலைப்பிலும், ஜோதிகா, மோனிகா ஆகியோர் சுந்தரத்தெலுங்கு என்ற தலைப்பிலும், யாமினி பக்திமொழி என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் யுவராஜ், தேசியம் காத்த தமிழ் என்ற தலைப்பிலும் பேசினர். இதில், உதவி பேராசிரியர் பெருமாள் மற்றும் பேராசிரியர்கள், பயிற்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்….