சொத்து தகராறில் பயங்கரம் பெட்ரோல் ஊற்றி தந்தையை எரித்த சென்னை டிரைவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் முத்துவேல்(60). இவரது மகன்கள் சாந்தகுமார்(36), முரளிதரன். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்தமகன் சாந்தகுமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் முரளிதரன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் முத்துவேலும் வசித்து வருகிறார். முரளிதரன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரது பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக அனுப்பி வைத்துள்ளார். மூத்த மகன் சாந்தகுமாருக்கும், தந்தை முத்துவேலுவிற்கும் சொத்தை பிரித்து பணம் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த சாந்தகுமார், அன்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை முத்துவேல் மீது பாட்டிலில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.முத்துவேலின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின்பேரில், தா.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சாந்தகுமாரை கைது செய்தனர்….

Related posts

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை