சேவுகம்பட்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

பட்டிவீரன்பட்டி, ஏப். 30: பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் எம்.வாடிப்பட்டியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மன்ற தலைவர் வனிதா தங்கராஜன் தலைமை வகிக்க, துணை தலைவர் தெய்வராணி விஜயன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கீதா வரவேற்றார். இக்கூட்டத்தில் சேவுகம்பட்டி 9வது வார்டில் சிவன் கோயில் குறுக்கு தெருக்களில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, வடிகால், கான்கிரீட் சிறுபாலம் அமைத்தல், 1 முதல் 15 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்கள், குறுக்கு சந்துகள் ஆகியவற்றை ஜிபிஎஸ் கருவி கொண்டு துல்லியமாக அளவீடு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்