Saturday, June 29, 2024
Home » சேலத்தில் வாலிபர் இளம்பெண் மாயம்

சேலத்தில் வாலிபர் இளம்பெண் மாயம்

by Karthik Yash

சேலம், ஜூன் 29: சேலம் கிச்சிப்பாளையம் அசோக்நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஷ்(38). இவர் வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜன்னத்துல் பிர்தோஷ்(19). இவர் கடந்த 24ம் தேதி, வீட்டிலிருந்து வின்சென்ட்டில் உள்ள மதராசாவிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காதல் விவகாரம் காரணமாக தனது மகள், இப்ராஹிம் பாதுஷா என்பவரோடு சென்று விட்டதாக கிச்சிப்பாளையம் போலீசில் ரியாஷ் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஜலால்புறா மஸ்ஜீத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் அமித். இவர் பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பானு(30). குடிப்பழக்கம் கொண்ட ஷாகுல் அமித் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்ேவறு இடங்களில் தேடிப்பார்த்த போதும் ஷாகுல் அமித் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் பானு அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

10 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi