Sunday, June 30, 2024
Home » சேலத்தில் பொதுவிநியோக திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

சேலத்தில் பொதுவிநியோக திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

by Ranjith

 

தஞ்சாவூர், ஜூன் 21: பொதுவிநியோக தி்ட்டத்திற்காக தஞ்சாவூரில் இருந்து 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயில் மூலம் நேற்று சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போன்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டமாகும். தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிரந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் 1,250 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டு சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

sixteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi