Friday, July 5, 2024
Home » சேலத்தில் குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை கொன்று பேரலில் வைத்த மனைவி: துர்நாற்றம் வீசியதால் காதலனுடன் போலீசில் சிக்கினார்

சேலத்தில் குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை கொன்று பேரலில் வைத்த மனைவி: துர்நாற்றம் வீசியதால் காதலனுடன் போலீசில் சிக்கினார்

by kannappan

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (33). மாடு வெட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா (30). சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து பிரியாவும், வாலிபர் ஒருவரும் தண்ணீர் பேரலை வெளியே தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. பக்கத்து வீடுகளில் தூங்கியவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து விசாரித்தனர். அப்போது பிரியாவும் அந்த வாலிபரும் முன்னுக்குபின் முரணாக பதில்அளித்துள்ளனர்.  இதனால் கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது பேரலில் சேதுபதியின் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. பேரலோடு சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரியாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). கட்டிட தொழிலாளியான இவருக்கு  திருமணம்  ஆகவில்லை. பிரியாவின் குழந்தைகளை பார்க்க சதீஷ்குமார் அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வார். மேலும் பிரியாவுக்கு தேவையான உதவிகளையும் சதீஷ்குமார் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. சேதுபதி இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், உனது குடிகார கணவனை விட்டுவிட்டால் உன்னை  திருமணம் செய்து கொள்வேன் என சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி சேதுபதி குடிபோதையில் பிரியாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, சதீஷ்குமாரும் பிரியாவும் சேர்ந்து சேதுபதியை கட்டை மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிர் இழந்துள்ளார். சடலத்தை மறைக்க வீட்டில் இருந்த தண்ணீர் பேரலில் போட்டு மூடி வைத்துள்ளனர். ஒரு வாரமான நிலையில் பேரலில் இருந்த உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனால் யாருக்கும் தெரியாமல் உடலை வெளியே கொண்டு சென்று வீச முடிவு செய்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பேரலை வெளியே கொண்டு வந்துள்ளனர். அப்போது துர்நாற்றம் கடுமையாக வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசில் சிக்கிக்கொண்டனர் என்பது தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர். …

You may also like

Leave a Comment

nine + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi