சேரன்மகாதேவியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி திறந்தார்

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் திருஉருவ சிலை திறப்புவிழா நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் நேற்று நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பி.எச்.பாண்டியன் திருவுருவ சிலையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் பி.எச்.பாண்டியன் ஆவார். கோவிந்தப்பேரியில் தொடங்கி கோட்டை வரை ேகாலோச்சிய பெருமை அவருக்கு உண்டு. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவரோடு இணைந்து பணியாற்றியதோடு, 4 முறை எம்எல்ஏ, 1985ல் சபாநாயகர் பதவியை அலங்கரித்த பெருமை அவருக்கு உண்டு. தேர்தல் ஆணையர் சேஷனுக்கு இணையாக பிஎச் பாண்டியன் சபாநாயகர் பதவிக்கு பேரும், புகழும் ஈட்டித் தந்தார். அவர் சபாநாயகராக ஆன பின்புதான் சட்டமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார். …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி