சேந்தமங்கலம் அரசு கல்லூரி மாணவி தேர்வு

சேந்தமங்கலம்: நாமக்கல்லில் நடந்த முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான மேசைப்பந்து போட்டியில், சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவி தர்ஷினி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், சான்றிதழ் பெற்றார். இதன் மூலம் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான மேசைப்பந்து போட்டியில் விளையாட, தர்ஷினி தகுதி பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷினியை, சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் முதல்வர் பாரதி பதக்கம், சான்றிதழ் அறிவித்து பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கணிதத்துறை இணை பேராசிரியர் செந்தில்குமரன், உடற்கல்வி இயக்குனர் ரவி, அனைத்து துறை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து