சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளில் கனமழை காரணமாக 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன

சேத்துப்பட்டு :  கனமழை காரணமாக சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் நேற்று 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சிவனேசன், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, 2 புளிய மரங்களையும் உடனடியாக அகற்றி போக்குவரத்து சீர் செய்தனர்.இதேபோல், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மீது சாலையோரம் இருந்த புளியமரம் வேராடு சாய்ந்தது. இதில், டிராக்டர் மற்றும் டிப்பர் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர். இதேபோல், வந்தவாசி அடுத்த மருதாடு- ஓசூர் சாலையில் ஒரு புளியமரமும் தெள்ளாறு அருகே மற்றொரு புளியமரமும் வேரோடு சாய்ந்தது….

Related posts

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் மோசடி; கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு

மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்