சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு-போளூர் சாலையில் உள்ள இடையங்குளத்தூர் பொன்னியம்மன் கோயில் அருகே 4 குரங்குகள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு நேற்று திடீரென இறந்துவிட்டது. இதைக்கண்ட மற்ற குரங்குகள், இறந்த குரங்களின் உடலை அங்கும் இங்குமாக இழுத்துகொண்டு அலைந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இறந்த குரங்கை மீட்டு, மனிதர்களுக்கு செய்வதைபோன்று மாலை அணிவித்து இறுதி அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து பாடையில் ஏற்றி இறுதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் கோயில் வளாகத்திற்கு கொண்டுவந்து நல்லடக்கம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் இறந்த குரங்கு புதைக்கப்பட்ட இடத்தில் சிறிய அளவில் ஆஞ்சநேயர் கோயில் கட்டவும் தீர்மானித்துள்ளனர். முன்னதாக குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடந்தபோது ஏராளமானோர் கண்ணீர் விட்டு அழுதனர்….