சேத்திரபாலபுரத்தில் ஆபத்தான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அஷ்டமி பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வளாகத்தில் உள்ளே மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதுடன், சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இக்கோயிலுக்கு அஷ்டமி அன்று குறைந்தது சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் எந்த நேரத்திலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேத்திரபாலபுரம் கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்து வருகிறது. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லையென்றால் இப்பகுதியிலுள்ள அன்றாட கூலி வேலைக்கு செல்வோரும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தண்ணீர் இல்லாமல் பெரிதும் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது.எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தரவேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்களும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை