சேதமான மின் மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகரும்பூர் ஊராட்சியில் அடங்கிய குமரஞ்சேரி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாய நிலத்திற்கு நடுவே வயல்வெளி பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உயர் அழுத்த மின் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து சாய்ந்து கிடக்கிறது. இந்த மின் டிரான்ஸ்பார்மர் எந்நேரத்தில் கீழே விழுந்து, அதிகளவு உயிர் சேதங்களை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, சேதமான மின் மாற்றியை அகற்றி புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்