சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 5: ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துப்பட்டிணம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் செங்குடி விலக்கில் இருந்து எட்டியதிடல் வழியாக முத்துப்பட்டிணம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயனடைகின்றனர்.

மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முத்துப்பட்டிணத்தில் அமைந்துள்ளதால், அங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வளவு சிறப்புமிக்க இத்திருத்தலம் அமைந்துள்ள இப்பகுதிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு சாலையை கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக சீரமைப்பு செய்யாமல் விட்டு விட்டதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளன.

இதனால் இரவு நேரங்களில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர் கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைவில் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு