சேதமடைந்த சாலைகளால் மக்கள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாலைகள் சேதமடைந்து, குண்டும், குழியுமாக இருப்பதால் டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்காக பல்வேறு சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களின்போது சாலை பள்ளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பீமா ராஜா சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.  சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் டூவீலர்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்