செவிலியர் வீட்டில் 25 பவுன் கொள்ளை

நாமக்கல்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (59). செவிலியரான இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து விஜயலட்சுமி, தனது சகோதரியுடன் சேர்ந்து பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, விஜயலட்சுமி தனது சகோதரியுடன் ஸ்ரீரங்கம் சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை இருவரும் பாலப்பட்டிக்கு வந்தபோது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை