செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்

சென்னை: தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். தேனாம்பேட்டையை சேர்ந்த நவீன்குமார் (22), கடந்த மாதம் 17ம் தேதி, நந்தனம் சேமியர்ஸ் ரோட்டில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.  அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் நவீன்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் செல்போன் பறித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறித்து சென்ற செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் விக்னேஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர். …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது