செல்போன் பறித்த ரவுடி கைது

ஆவடி: ஆவடி அருகே பூச்சி அத்திப்பட்டு, மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஷேசாராம்(36). வீராபுரம் கன்னியம்மன் நகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஷேசாராம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அவரை ஒரு வாலிபர் வழிமறித்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்தார். புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், ஷேசாராமிடம் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நந்தகுமார்(23) செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த நந்தகுமாரை நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்….

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது