Thursday, July 4, 2024
Home » செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் இளம் பெண் தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற தாயும் படுகாயம் திருவண்ணாமலையில்

செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் இளம் பெண் தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற தாயும் படுகாயம் திருவண்ணாமலையில்

by Karthik Yash

திருவண்ணாமலை, ஜூன் 23: திருவண்ணாமலையில் செல்போன் நீண்ட நேரம் பயன்படுத்துவதை கண்டித்ததால், இளம் பெண் தீக்குளித்தார். காப்பாற்ற முயன்ற தாயும் தீயில் கருகி படுகாயம் அடைந்தார். இருவரும் ஆபத்தான நிைலயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை வஉசி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் மோகன். வியாபாரி. இவரது மனைவி புஷ்பா(45). மகள் லட்சுமி(22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக முயற்சித்து வருகிறார். இந்நிலையில், லட்சுமி வீட்டு வேலைகளை செய்யாமல், நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த லட்சுமி, நேற்று வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.

தீயில் கருகி மகள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் புஷ்பா, காப்பாற்ற முயன்றார். அதனால், அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் காப்பாற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nineteen + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi