செல்போன் திருடிய வாலிபர் கைது

அரூர், ஜூலை 16: அரூர் அடுத்த செக்காம்பட்டியில் கோழிக்கடை நடத்தி வருபவர் முத்துசாமி (35). கடந்த 13ம்தேதி இரவு, கடையில் தூங்கி கொண்டிருந்த போது, மர்ம நபர் அவரது செல்போனை திருடி சென்று விட்டார். நேற்று முத்துசாமி, தனது நண்பருடன் அரூரில் ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்றிருந்த நபர், முத்துசாமியின் செல்போனை வைத்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து முத்துசாமி, அந்த நபரிடம் சென்று செல்போன் குறித்து கேட்ட போது, சுதாரித்துக்கொண்ட அந்த நபர், தப்பியோட முயற்சி செய்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் ஸ்ரீராம்(28) என்றும், அவரது நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஸ்ரீராமை அரூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள சந்துருவை தேடி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி