செல்போன் திருடிய வாலிபர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரத் பிஸ்வான்(21). டிரைவர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து செல்போனை தனது தலைக்கு மேலே வைத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நேற்று காலை புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவரிடம் செல்போன் இருப்பதைக் கண்டு இதுகுறித்து விசாரணை செய்தனர். அதில் திருடுபோன செல்போனை அந்த நபர் தான் எடுத்தார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த ஹரி (எ) ஹரிஹரன்(21) என்பதும் இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஹரிஹரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது