செல்போன் திருடிய சிறுவன் பிடிபட்டான்

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் வீடு புகுந்து செல்போன் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். சென்னை காசிமேடு, காசி கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் வேனுஸ் (38). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர், பால்கனி வழியே வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பின்னர். மேஜையில் இருந்த வேனுசின் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயறுள்ளார். ஆள் நடமாட்டத்தை கவனித்த வேனுஸ் எழுந்து சத்தம் போட்டார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, காசிமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிங்காரவேலன் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு கெல்லீசில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது