செல்போன் சார்ஜரால் கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி கைது: திருமங்கலம் அருகே பரபரப்பு

 

திருமங்கலம், ஆக. 4: திருமங்கலம் அருகேயுள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி ஜெயா (26). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இருவரும் கப்பலூர் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஜெயா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் தங்கியுள்ளார். இந்நிலையில் டூவீலரில் வீட்டை விட்டு வெளியே சென்ற காளிதாஸ் தவறி கீழே விழுந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது கணவனை சமாதானம் செய்ய வீட்டிற்கு ஜெயா வந்தார். அப்போதும் காளிதாஸ் கோபத்தில் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா தனது கணவன் காளிதாசின் கழுத்தை செல்போன் சார்ஜர் வயர் கொண்டு சுற்றி நெரித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்