Wednesday, July 3, 2024
Home » செல்போன் சார்ஜரால் கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி கைது: திருமங்கலம் அருகே பரபரப்பு

செல்போன் சார்ஜரால் கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி கைது: திருமங்கலம் அருகே பரபரப்பு

by Ranjith

 

திருமங்கலம், ஆக. 4: திருமங்கலம் அருகேயுள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி ஜெயா (26). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இருவரும் கப்பலூர் சிட்கோவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஜெயா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் தங்கியுள்ளார். இந்நிலையில் டூவீலரில் வீட்டை விட்டு வெளியே சென்ற காளிதாஸ் தவறி கீழே விழுந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது கணவனை சமாதானம் செய்ய வீட்டிற்கு ஜெயா வந்தார். அப்போதும் காளிதாஸ் கோபத்தில் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா தனது கணவன் காளிதாசின் கழுத்தை செல்போன் சார்ஜர் வயர் கொண்டு சுற்றி நெரித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi